என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் ஏசி இயங்காததால் தகராறு- டிரைவரை தாக்கிய வாலிபர்கள் கைது
Byமாலை மலர்4 Feb 2020 9:45 AM GMT (Updated: 4 Feb 2020 9:45 AM GMT)
காரில் ஏசி இயங்காததால் ஏற்பட்ட தகராறில் டிரைவரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
அனகாபுத்தூரை சேர்ந்தவர் லோகநாதன் (32). வாடகை கார் டிரைவர். இவர் 2-ந்தேதி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து 3 வாலிபர்களை கோவிலம்பாக்கத்துக்கு சவாரி ஏற்றிச் சென்றார்.
அப்போது காரில் ஏ.சி. இல்லாததால் வாலிபர்கள் டிரைவரிடம் தகராறு செய்து அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக லோகநாதனுடன் பணியாற்றிய சக கார் டிரைவர்கள் 200 பேர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் விசாரணையில் லோகநாதனை தாக்கியது செங்கல்பட்டை சேர்ந்த பிரித்வி, பழவந்தாங்கலை சேர்ந்த ரஞ்சித், கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்த ஆல்டோ என்பது தெரிய வந்தது. இதில் பிரித்வி, ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக ஆல்டோவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X