search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மரணம்
    X
    மாணவி மரணம்

    காட்பாடி அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி திடீர் மரணம்

    காட்பாடி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மகள் நிவேதினி (வயது 14) லத்தேரி குடியாத்தம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு கே.வி.குப்பம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.

    பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    லத்தேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×