என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரஜினி விளம்பரத்திற்காக பிரச்சினைக்குரிய கருத்துகளை பேசி வருகிறார்- ஈஸ்வரன் தாக்கு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மையை சிறப்பாக செய்பவர்களுக்கு என்று விருதினை தமிழக அரசு உருவாக்கி நீர் மேலாண்மையை மேற்ககொள்பவர்களுக்கு வழங்க வேண்டும். இது போன்று விருதினை வழங்குவதன் மூலமாக தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்படும்.
காலிங்கராயன் கால்வாயில் மாசு அடைந்து உள்ளது என்று கடந்த 15 அண்டுகளுக்கு மேலாக எங்கள் கட்சி சார்பில் பேசி வருவதாகவும் தற்போது நடிகர் கார்த்தி காலிங்கராயன் கால்வாயை இளைஞர்கள் தூய்மைபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். காலிங்கராயன் கால்வாயை தூர்வார முன் உதாரணமாக 2 ஆயிரம் இளைஞர்களை திரட்ட நாங்கள் தயாராக உள்ளோம். நடிகர் கார்த்தி வர தயாரா?
நடிகர் ரஜினிகாந்த் பிரச்சனைக்கு உரிய கருத்துகளை தேடி தேடி பேசி வருகிறார். துக்ளக் விழாவில் சென்று முரசொலி பற்றி நடிகர் ரஜினி பேசி இருக்க கூடாது . விளம்பரத்துக்காக பிரச்சனைக்குரிய கருத்துகளை அவர் பேசி வருகிறார். திமுக -காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.
தலைவர்கள் சில கருத்துக்களை பேசுவதும் அந்த கருத்துக்கள் நாளடைவில் மறந்து போவதும் வழங்கமான ஒன்று தான் .
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்