என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானாமதுரை அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர்கள் 10 பேர் கைது
Byமாலை மலர்17 Jan 2020 2:40 PM GMT (Updated: 17 Jan 2020 3:12 PM GMT)
மானாமதுரை அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர்கள் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில தினங்களாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தநிலையில் மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 வாலிபர்கள் இருந்தனர். சோதனையில் ஒரு கிலோ கஞ்சா, அரிவாள், கத்தி உள்ளிட்டவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த சிவா(வயது20), முத்துசரவணன்(19), பாலமுருகன்(21), வாணிஜெயராம்(24), திருப்பதி(23), அஜித் என்ற சேட்(19), ஹரி(19), மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்(27), ராஜன்(22), தியாகராஜன்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணரா ஜபுரம் அருகே இவர்கள் காரில் கஞ்சாவுடன் வந்த போது சிக்கினர். இதில் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த 7 பேரும், மதுரையை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம், கஞ்சா, கார், கத்தி, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பரமக்குடி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிவித்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.
மானாமதுரை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில தினங்களாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தநிலையில் மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 வாலிபர்கள் இருந்தனர். சோதனையில் ஒரு கிலோ கஞ்சா, அரிவாள், கத்தி உள்ளிட்டவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த சிவா(வயது20), முத்துசரவணன்(19), பாலமுருகன்(21), வாணிஜெயராம்(24), திருப்பதி(23), அஜித் என்ற சேட்(19), ஹரி(19), மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்(27), ராஜன்(22), தியாகராஜன்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணரா ஜபுரம் அருகே இவர்கள் காரில் கஞ்சாவுடன் வந்த போது சிக்கினர். இதில் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த 7 பேரும், மதுரையை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம், கஞ்சா, கார், கத்தி, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பரமக்குடி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிவித்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X