என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் உள்பட இருவர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் கிராமத்தில் 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் சக்திவேல் (வயது 23) என்பவர் அந்த சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த சிறுமி விடுமுறையில் திருவாரூர் மாவட்டம், களப்பாலில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையறிந்த சக்திவேல் அந்த சிறுமியை அழைத்து வருவதற்கு தான் சென்றால் அனுப்பமாட்டார்கள் என்று நினைத்து அந்த சிறுமியின் உறவினரான பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த கபிலன்(25) என்பவரை அனுப்பி அந்த சிறுமியை அழைத்து வந்து, சக்திவேலின் பாட்டி வீடான பஞ்சநதிக்குளம் கிராமத்திற்கு அழைத்து வந்து கட்டாய தாலிகட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை அறிந்த அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டு, வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து சக்திவேல், கபிலன் ஆகிய இருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்