search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    ஈரோடு தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்- கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்ய கட்சியின் ஈரோடு தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகளை நியமனமித்து கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    ஈரோடு:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.

    அதன்படி ஈரோடு தென் மேற்கு மாவட்டத்தின் புதிய மாநகர ஒன்றிய செயலாளர்கள், ஈரோடு தென் மேற்கு மாவட்ட செயலாளர் துரைசேவுகன் ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி ஈரோடு தென்மேற்கு நகர செயலாளர்களாக ஜே .கண்ணன், ஆர் .முரளி, பா.அற்புதராஜ், அழ.கணேசனும், ஈரோடு ஒன்றிய செயலாளராக புவனேஸ்வரியும், பெருந்துறை ஒன்றிய செயலாளராக வி.சேமாள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×