என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை மிரட்டி 9 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்7 Jan 2020 11:48 AM GMT (Updated: 7 Jan 2020 11:48 AM GMT)
காரைக்குடியில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை மற்றும் பொருட்களை பறித்து சென்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி முத்துநகரைச் சேர்ந்தவர் ஜான்கருணாநிதி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி (வயது 43). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டார். மதிய நேரத்தில் ஜெயராணி வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ஜெயராணி கழுத்தில் கத்தியை வைத்து நகை-பணத்தை தருமாறு மிரட்டினர். இதனை தொடர்ந்து அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்பட 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை திருடிக்கொண்டு அந்த நபர்கள் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X