என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து, 4 ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது
Byமாலை மலர்4 Jan 2020 5:13 AM GMT (Updated: 4 Jan 2020 5:13 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து, 4 ஒன்றியத்தை திமுக கைப்பற்றி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மாவட்டத்திலுள்ள 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் நீலகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
மாவட்டத்திலுள்ள ஊட்டி,குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க. கூட்டணியே பெரும் பான்மை பெற்றுள்ளது. 4 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்களும் தி.மு.க. வசமாகியுள்ளன.
அத்துடன் மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் அரசியல் கட்சியினருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் இல்லாவிட்டாலும், தி.மு.க. ஆதரவு பெற்றவர்கள் 24 ஊராட்சிகளில் தலைவர் பதவியையும், 200-க்கும் மேற்பட்டோர் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X