என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு
    X
    வாக்குப்பதிவு

    சத்தியமங்கலம் அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

    சத்தியமங்கலம் அருகே புங்கார் பஞ்சாயத்து பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. 2-ம் கட்ட தேர்தலையொட்டி வாக்குசாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம் யூனியன் சுஜ்ஜில்குட்டை ஊராட்சி புங்கார் பஞ்சாயத்தில் 1-வது வார்டில் புங்கார் பகுதியில் 228 ஓட்டுகளும் பக்கத்தில் உள்ள நம்பிபுரத்தில் 17 ஓட்டுகளும் உள்ளன.

    இதில் புங்கார் பஞ்சாயத்து பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். தங்கள் பகுதி மக்களுக்கு பட்டா கேட்டு பலமுறை முறையிட்டு உள்ளோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி இன்று நடந்த தேர்தலில் யாரும் ஓட்டு போடவில்லை.

    அதே சமயம் பக்கத்து ஊர் பகுதியான நம்பிபுரத்தில் உள்ள 17 ஓட்டுகளில் 7 ஓட்டுகள் மட்டும் போடப்பட்டன. இந்த 7 ஓட்டு போட பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×