என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் விடுமுறை - ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்26 Dec 2019 9:58 AM GMT (Updated: 26 Dec 2019 9:58 AM GMT)
பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை, காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மூலம் வனத்தை சுற்றிப் பார்த்து ரசித்தனர். பின்னர் தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் மாலையில் நடைபெற்ற யானைகளின் அணிவகுப்பு, உணவு வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை கண்டுகளித்தனர்.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி சென்று காட்டுக்குள் வன விலங்குகளை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் செலுத்தினர். இதற்காக யானை சவாரி செல்லுமிடத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக அவர்களின் வாகனங்கள் தெப்பக்காடு பகுதியில் சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
இத்தாலியன் பூங்கா, கல்லாகிய மரம், இந்திய வரைப்படம், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கண்ணாடி மாளிகையில் 20-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த பல வண்ண மலர்களை கொண்ட பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். லேசான சாரல் மழை மற்றும் பனிமூட்டத்தின் நடுவே மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகுகளில் சவாரி மேற்கொண்டனர். காட்சி மேடைகளில் நின்றவாறு ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு இல்ல வளாகத்தில் சுற்றுலா வாகனங்கள் நிரம்பி வழிந்ததால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், கோத்தகிரி கோடநாடு காட்சி என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சாக்லேட்,டீ தூள், வர்க்கி உள்ளிட்டவைகளை வாங்க கடைகளிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மூலம் வனத்தை சுற்றிப் பார்த்து ரசித்தனர். பின்னர் தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் மாலையில் நடைபெற்ற யானைகளின் அணிவகுப்பு, உணவு வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை கண்டுகளித்தனர்.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி சென்று காட்டுக்குள் வன விலங்குகளை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் செலுத்தினர். இதற்காக யானை சவாரி செல்லுமிடத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக அவர்களின் வாகனங்கள் தெப்பக்காடு பகுதியில் சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
இத்தாலியன் பூங்கா, கல்லாகிய மரம், இந்திய வரைப்படம், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கண்ணாடி மாளிகையில் 20-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த பல வண்ண மலர்களை கொண்ட பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். லேசான சாரல் மழை மற்றும் பனிமூட்டத்தின் நடுவே மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகுகளில் சவாரி மேற்கொண்டனர். காட்சி மேடைகளில் நின்றவாறு ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு இல்ல வளாகத்தில் சுற்றுலா வாகனங்கள் நிரம்பி வழிந்ததால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், கோத்தகிரி கோடநாடு காட்சி என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சாக்லேட்,டீ தூள், வர்க்கி உள்ளிட்டவைகளை வாங்க கடைகளிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X