என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பணிகள்: சீர்காழி- கொள்ளிடம் பகுதிகளில் நாகை கலெக்டர் ஆய்வு
சீர்காழி:
சீர்காழி ஊராட்சியில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 37 ஊராட்சி தலைவர்கள், 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 309 ஊராட்சி உறுப்பினர்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 192 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அனைத்து வாக்குசாவடிகளுக்கும் கொண்டு செல்லப்படும் வாக்கு சீட்டுக்கள், மை ஆகியவை தயார் நிலையில் உள்ளதா எனவும் மற்ற ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
அப்போது சீர்காழி ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன்,மேலாளர் கலிராஜ், பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா ஆகியோர் உடனிருந்தனர்.
இதே போல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட கலெக்டர் பிரவீன்.பி.நாயர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.






