search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தை
    X
    சிறுத்தை

    கோத்தகிரி அருகே ஒரு மாதமாக சுற்றிதிரியும் சிறுத்தை - பொதுமக்கள் பீதி

    கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சுண்டட்டி, சேலக்கொரை, ஈளாடா மற்றும் கதகுதொறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சுண்டட்டி, கதகுதொறை பகுதிகளில் தேயிலை தோட்டங்களின் அருகே மற்றும் குடியிருப்புகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு வரும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்தால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.கடந்த வாரம், கதகுதொறை பகுதியில் உள்ள காட்டேஜூக்குள் பகல் நேரத்தில் சிறுத்தை புகுந்தது. இது அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து வனத்துறையினர், அப்பகுதியில், நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் சிறுத்தை சுற்றி வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மேலும் சுற்றிதிரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து நீலகிரி வன கோட்ட, ஏ.சி.எப்., சரவணகுமார் கூறுகையில்,’’சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, அந்த பகுதியில் நான்கு கேமரா வைத்துள்ளோம். மேலும், 10 கேமராக்கள் பொருத்த முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×