என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாம்பரத்தில் அனுமதியின்றி போராட்டம் - 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு
Byமாலை மலர்18 Dec 2019 9:09 AM GMT (Updated: 18 Dec 2019 9:09 AM GMT)
தாம்பரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தாம்பரம்:
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முக சாலையில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
இதில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினரின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதனன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது அனுமதி யின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, ஒரே இடத்தில் அதிக பேர் கூடியது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முக சாலையில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
இதில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினரின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதனன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது அனுமதி யின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, ஒரே இடத்தில் அதிக பேர் கூடியது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X