search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்ரீபெரும்புதூரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

    ஸ்ரீபெரும்புதூரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும்.இங்கு வடமாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர்.இங்கு கல்லுரிகளும் உள்ளன.

    இப்பகுதியில் போதை பொருள் கஞ்சாவை சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் கீவளூர் ஊராட்சியில் சோதனை செய்தனர்.சோதனையில் கீவளூர் பஜனை கோவில் தெருவில் சீனிவாசன் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டை வைத்து சிறு பொட்டலத்தில் பேக் செய்து வட மாநிலத்தவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசனை கைது செய்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×