search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    4 பேரை சுட்டுக்கொன்றது நல்ல வி‌ஷயம் - பிரேமலதா

    பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது நல்ல வி‌ஷயம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலையில் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளை சுட்டு கொன்றது நல்ல வி‌ஷயம்.

    இதேபோல் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று மாலை 4.30 மணியளவில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்தபேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு கலந்துகொள்ளும் என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தே.மு.தி.க. தயாராக உள்ளது.

    வெங்காயம்

    வெங்காய விலையை பொறுத்தவரை பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×