search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேதாரண்யம் அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை

    வேதாரண்யம் அருகே தொடந்து நெஞ்சுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் துளசியாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஹாஜா (வயது 50). மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டில் உள்ளவர்களிடம் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஹாஜாவை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஹாஜா இறந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×