என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பவானி அருகே தோட்டத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
ஈரோடு:
பவானி அடுத்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). பழனிச்சாமி கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம். அவரது குடும்பத்தார் அவருக்கு ஆறுதலாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமியின் மகன் ராஜேந்திரன் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி போன் எடுக்கவில்லை இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார்.
பெரியபுலியூர் அருகே பூலப்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் சென்று பார்த்தபோது பழனிச்சாமி விஷத்தைக் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர் பரிசோதனை செய்தபோது பழனிச்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்