search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்த முதியவர் மரணம்

    வேதாரண்யம் அருகே குளத்தில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் காவல் சரகம், வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது60). கூடை பின்னும் தொழிலாளி. மனைவி இறந்து விட்டார். இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 

    சோமு கரியாப்பட்டினம் ரெயில்வே ஸ்டேசன் அருகே குடிசை அமைத்து அதில் தனியே தங்கி வந்தார். இரண்டு நாட்களாக அவரை காணவில்லையாம்.

    நேற்று கரியாப்பட்டினம் ரெயிலடி குளத்தில் சோமு பிணமாக மிதப்பது கண்டு அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து இறந்த சோமு உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
    Next Story
    ×