search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. அலுவலகம் முற்றுகை- விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு

    பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் தமிழாதன், மன்னர்மன்னன், கலையரசன், கிருஷ்ணகுமார் வக்கீல்கள் ஸ்டாலின், ரத்தினவேல் உட்பட பலர் பேசினார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வீரசெங்கோலன் சிறப்புரையாற்றினார். 

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது பொய் வழக்குபதிவு செய்த காவல்துறை அதிகாரிகளை கண்டிப்பது, பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் காவல்துறையை கண்டித்து வரும் 29ம்தேதி பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×