search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    கமலுக்கு ஏற்பட்ட கதிதான் ரஜினிக்கும் ஏற்படும் - ஜெயக்குமார்

    கமலுக்கு ஏற்பட்ட கதிதான் ரஜினிக்கும் ஏற்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறது. இதுகுறித்து தமிழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை ஜலசக்தி அமைச்சரை சந்தித்து நானும், அமைச்சர் தங்கமணியும் பேச இருக்கிறோம்.

    ஒரு மாற்று அரசியல் என்பது ரஜினிகாந்த் ஒரு வரால் மட்டும்தான் ஏற்படுத்த முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். இது அவருடைய கருத்து. இதுபற்றி நாங்கள் பலமுறை கருத்துக்களை சொல்லி விட்டோம்.

    மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் திரைப் படத்தில் பெரிய நட்சத்திரங்களாகவும், அரசியல் வானில் மிகவும் பெரிய நட்சத்திரங்களாகவும் ஜொலித்தார்கள்.

     

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

    மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் சக்தியாக இருவரும் இருந்தார்கள். ஆனால் இன்று ரஜினியும், கமலும் திரையில் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அரசியல் வானில் இவர்கள் ஜொலிக்காத நட்சத்திரங்கள்.

    கமல் கட்சி தொடங்கி அவருடைய சக்தி என்ன என்பதை தெரிந்து கொண்டார். அதே நிலைதான் ரஜினிக்கும் ஏற்படும்.

    ஆடிட்டர் குருமூர்த்தி சில நேரங்களில் அ.தி.மு.க.வை தொட்டு வாங்கி கட்டி கொண்டது அனைவருக்கும் தெரியும். நேற்று திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆணவத்தின் உச்சியில் பேசி இருக்கிறார்.

    பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி 2021 பொதுத் தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காலடியில் வைப்போம் என்று கூறியிருக்கிறாரே? அப்படியானால் அவர் தான் முதல்-அமைச்சர் வேட்பாளரா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பொதுக் குழுவில் பேசியது கட்சிக்குள் நடந்த வி‌ஷயம். வீணான குழப்பத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

    Next Story
    ×