என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலை கைவிட மறுத்த மகளை தீ வைத்து கொன்ற தாய்
Byமாலை மலர்20 Nov 2019 5:15 AM GMT (Updated: 20 Nov 2019 5:15 AM GMT)
நாகப்பட்டினம் அருகே காதலை கைவிட மறுத்த ஆத்திரத்தில் மகளை தீ வைத்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.
இதுபற்றி கேள்விப்பட்ட பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இதற்கிடையே காதலை கைவிட மறுத்து காதலனுடன் வெளியூருக்கு செல்ல முயன்ற மகளை பெற்றோர் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனை சந்தித்து மகள் பேசிக் கொண்டிருந்ததை உமா மகேஸ்வரி பார்த்தார். இதுபற்றி நேற்றுமுன்தினம் இரவு மகளிடம் உமா மகேஸ்வரி கேட்டார். அப்போது தாய் பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்எண்ணையை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தனது உடலிலும் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் உடல் கருகி இருவரும் அலறினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தாய்- மகள் இருவரையும் மீட்டு நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மகள் இறந்தார்.
இதற்கிடையே தாய் உமா மகேஸ்வரி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலை கைவிட மறுத்த மகளை தாயே எரித்து கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.
இதுபற்றி கேள்விப்பட்ட பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இதற்கிடையே காதலை கைவிட மறுத்து காதலனுடன் வெளியூருக்கு செல்ல முயன்ற மகளை பெற்றோர் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனை சந்தித்து மகள் பேசிக் கொண்டிருந்ததை உமா மகேஸ்வரி பார்த்தார். இதுபற்றி நேற்றுமுன்தினம் இரவு மகளிடம் உமா மகேஸ்வரி கேட்டார். அப்போது தாய் பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்எண்ணையை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தனது உடலிலும் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் உடல் கருகி இருவரும் அலறினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தாய்- மகள் இருவரையும் மீட்டு நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மகள் இறந்தார்.
இதற்கிடையே தாய் உமா மகேஸ்வரி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலை கைவிட மறுத்த மகளை தாயே எரித்து கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X