என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு புறநகர் மாவட்டத்தில் பரவலான மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
குறிப்பாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி வழிந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்டத்தின் பிரதான அணையான பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 கன அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களா கனமழை அளவு குறைந்து மீண்டும் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. பவானியில் அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குண்டேரிப்பள்ளம் அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. சத்தியமங்கலம், வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜ் நகர், திம்பம் மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதைப்போல் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியை பொருத்தவரை நேற்று காலை வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை திடீரென லேசாக மழை பெய்ய தொடங்கியது. சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்