என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி முதியவர் பலி
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள வெலிங்டன் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் சைமன்(வயது 87). இவர் இன்று காலை குன்னூரில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பிளாக் பிரிட்ஜ் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.
அப்போது வழியில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன.
இதை அவர் கவனிக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கூட்டமாக நின்ற காட்டெருமைகளுள் ஒரு காட்டெருமை ஓடி வந்து சைமனை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு வயிறு, கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வெலிங்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்