என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    காட்பாடி வியாபாரி மனைவியிடம் செயின் பறிப்பு

    காட்பாடியில் நடந்து சென்ற வியாபாரி மனைவியிடம் 5 பவுன் செயினை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    வேலூர்:

    காட்பாடி திருநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். வேலூர் மண்டி தெருவில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுமதி (வயது 50). நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த சுமதி கத்தி கூச்சலிட்டார்.

    இது குறித்து விருதம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×