search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போரூர் அருகே முதியவரிடம் நகை பறித்தவர் கைது

    போரூர் அருகே ஆட்டோவில் சென்றபோது முதியவரிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    போரூர்:

    போரூரை அடுத்த மதனந்தபுரம் அன்னை வேளாங்கண்ணி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல். இவர் நேற்று முன் தினம் காலை ஷேர் ஆட்டோ ஏறி மதுரவாயலை நோக்கி சென்று கொண்டிருந்தார் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே ஆட்டோ சென்ற போது அருகில் அமர்ந்து இருந்த மர்ம நபர் தீடீரென கந்தவேலின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தை பறித்து தப்பி சென்றார். 

    அதிர்ச்சி அடைந்த கந்தவேல் இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட திருநின்றவூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மகேஷ் என்கிற மகேந்திரன் என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×