search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நேதாஜி மார்க்கெட் அருகே மயங்கி கிடந்தவர் உயிரிழப்பு

    ஈரோடு நேதாஜி மார்க்கெட் அருகே மயங்கி கிடந்தவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு நேதாஜி பின்புரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்து விட்டார்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. 5 அடிஉயரம் உள்ள அவர் வலது மார்பில் ஒரு கருப்பு மச்சமும், இடது கால் முட்டிக்கு கீழ் காயத்தழும்பும் உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×