என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராணிப்பேட்டை அருகே மதுவாங்கி தராததால் வாலிபர் அடித்துக் கொலை
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அண்ணாநகரை சேர்ந்தவர் அமர்நாத் (வயது32). சென்னையில் சினிமா கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வருகிறார். சிப்காட் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (22). சினிமா துறையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
நண்பர்களான அமர்நாத், தங்க பாண்டியன் 2 பேரும் தீபாவளி கொண்டாட கடந்த சனிக்கிழமை ஊருக்கு வந்தனர். தீபாவளியையொட்டி நேற்று மாலை அண்ணாநகரில் உள்ள காலியிடத்தில் மது அருந்த முடிவு செய்தனர். அப்போது தங்க பாண்டியன் தன்னிடம் பணம் இல்லை. எனவே மதுவாங்கி தருமாறு அமர்நாத்திடம் கேட்டுள்ளார்.
அமர்நாத்தும் என்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது தங்க பாண்டியன், அமர்நாத்தை தாக்கியுள்ளார். அமர்நாத் தன்னிடம் இருந்த கத்தியால் தங்கபாண்டியனை வெட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் தனது அண்ணன் முத்து (25), தம்பி கார்த்திக் (18) ஆகியோருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணன், தம்பிகளுடன் தங்கபாண்டியனும் சேர்ந்து அமர்நாத்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமர்நாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்த அமர்நாத் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விஷாரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமர்நாத் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், முத்து, கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்