search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பவானி அருகே குட்டையில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

    பவானி அருகே குட்டையில் குளித்த வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அடுத்து தொட்டிபாளையம் பணங்காட்டு காலனி பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவரது மகன் பிரேம்குமார் (வயது 23).

    இவர் பவானியில் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்துவருகிறார் திருமணமாகவில்லை இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் மயிலம்பாடி கால்வாய் நாயக்கனூர் கசிவு நீர் குட்டையில் குளிக்க சென்றார்

    நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிய பிரேம்குமார் உயிரிழந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் கிடந்த உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    Next Story
    ×