search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சிவகிரி அருகே வி‌ஷம் குடித்து முதியவர் பலி

    சிவகிரி அருகே வி‌ஷம் குடித்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 75). இவரது மகள் வனிதா ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தனது கணவருடன் அரசு மருத்துமனை குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    முத்துசாமிக்கு முதுமையின் காரணமாக கடந்த சில நாட்களாக வயிற்று வலி இதய வலி இருந்து வந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக சிவகிரியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.

    சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாக இருந்ததால் முத்துசாமி விஷம் குடித்து விட்டார் பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார் .

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×