என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சத்தியமங்கலம் அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த இக்கரை நெகமம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது63) தொழிலாளி.
கிருஷ்ணன் சம்பவத்தன்று சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் அடுத்த கோவிந்தராஜபுரம் பகுதியிலுள்ள ஒருவருக்கு சொந்தமான பழைய வீட்டில் மரசாமான்களை ஏற்றிக் கொண்டு இருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் இருந்தனர்.
கிருஷ்ணன் மட்டும் பழைய மண் சுவர் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த மண் சுவர் இடிந்து விழுந்து கிருஷ்ணன் மீது அமுக்கியது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு உடன் வேலை வேலை செய்தவர்கள் ஓடி வந்து கிருஷ்ணனை மீட்டனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு கிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்