என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அறிவாலயத்தின் மூலப்பத்திரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்- எச்.ராஜா பேட்டி
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் .அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா அறிவாலயத்தின் மூலபத்திரத்தை மு.க. ஸ்டாலின் காட்டாத தன் மூலம் தி.மு.க.வின் சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலத்தில் உள்ளதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துறையை தி.மு.க.விற்காகத்தான் உருவாக்கினார். நான்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு தேசத்துரோகி. தமிழக அரசு அவரை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்காக சீமான் இதுவரை என்ன செய்து விட்டார். சீமானை போன்ற தீய சக்திகள், பிரிவினைவாதிகள் சமுதாயத்தில் நடமாட அருகதை இல்லாதவர்கள். தமிழக மக்களை திசை திருப்புவதற்காக தற்போது சீமான் இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்