என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாலாஜாவில் சீமான் உருவபொம்மை எரித்து காங்கிரஸ் போராட்டம்
வாலாஜா:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை காந்திசிலை அருகே நகர காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை தலைமையில், சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர துணைத் தலைவர்கள் மோகன், இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ராணி வெங்கடேசன், நகர துணைத்தலைவர் மோகனசுப்பிரமணியம், நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, எஸ்.சி.எஸ்.டி.பிரிவு காந்தி, புலவர் ரங்கநாதன் உள்பட 20 பேர் கலந்துகொண்டனர். அவர்களை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரசார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆற்காடு, உமராபாத் போலீஸ் நிலையத்தில் காங்கிரசார் சீமானை கைது செய்யக்கோரி புகார் அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்