என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வெம்பாக்கத்தில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 289 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 80.95 அடியாக உள்ளது. 59.04 அடி கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணை 44.61 அடியாக உள்ளது அணைக்கு நீர்வரத்து இல்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-32.3

    ஆரணி-3.2

    செங்கம்-9.6

    சாத்தனூர் அணை-9.2

    வந்தவாசி-2.3

    போளூர்-10.8

    கீழ்பென்னாத்தூர்-46.8

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், பொன்னை, சோளிங்கர், அம்முண்டி பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. வேலூரில் லேசான சாரல் மழை பெய்தது.

    வாணியம்பாடி, மேல்ஆலத்தூர், குடியாத்தம் ஆகிய இடங்களில் அரை மணி நேரம் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்-3.8

    வாணியம்பாடி-12.4

    ஆலங்காயம்-5.2

    அரக்கோணம்-11.4

    திருப்பத்தூர்-2.2

    மேல்ஆலத்தூர்-13.2

    வடபுதுப்பட்டு-20.3

    Next Story
    ×