என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெம்பாக்கத்தில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 289 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 80.95 அடியாக உள்ளது. 59.04 அடி கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணை 44.61 அடியாக உள்ளது அணைக்கு நீர்வரத்து இல்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை-32.3
ஆரணி-3.2
செங்கம்-9.6
சாத்தனூர் அணை-9.2
வந்தவாசி-2.3
போளூர்-10.8
கீழ்பென்னாத்தூர்-46.8
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், பொன்னை, சோளிங்கர், அம்முண்டி பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. வேலூரில் லேசான சாரல் மழை பெய்தது.
வாணியம்பாடி, மேல்ஆலத்தூர், குடியாத்தம் ஆகிய இடங்களில் அரை மணி நேரம் மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர்-3.8
வாணியம்பாடி-12.4
ஆலங்காயம்-5.2
அரக்கோணம்-11.4
திருப்பத்தூர்-2.2
மேல்ஆலத்தூர்-13.2
வடபுதுப்பட்டு-20.3
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்