search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    பெருந்துறை அருகே சிறுமிகளை மானபங்கம் செய்தவர் மீது வழக்கு

    பெருந்துறை அருகே சிறுமிகளை மானபங்கம் செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சின்னிவலசு பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமிகள் 2 பேர் அப்பகுதியில் ஒரு கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து (வயது 52) என்பவர் வந்தார்.

    அவர் அந்த 2 சிறுமிகளிடமும் நைசாக பேச்சு கொடுத்து தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார். பிறகு 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 2 சிறுமிகளும் தப்பி ஓடி வந்து பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு சைல்டு லைன் உறுப்பினரான புவனேஸ்வா பெருந்துறை போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் சரவணன் சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தங்கமுத்து மீது வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×