search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு அணைப் பகுதியில் கொட்டி தீர்த்த மழை

    ஈரோடு அணைப் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13 அடி உயர்ந்து நிரம்பியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதியான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம், கொடிவேரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று பெய்த பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13 அடி உயர்ந்து நிரம்பியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரும்பள்ளம் அணை பகுதியில் 65 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போன்று சத்தியமங்கலம், தாளவாடி, கொடிவேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    ஆனால் இதே நேரத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெப்பத்தாலும் புழுக்கத்தாலும் மக்கள் அவதி அடைந்தனர்.


    Next Story
    ×