என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு அணைப் பகுதியில் கொட்டி தீர்த்த மழை
Byமாலை மலர்12 Oct 2019 10:05 AM GMT (Updated: 12 Oct 2019 10:05 AM GMT)
ஈரோடு அணைப் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13 அடி உயர்ந்து நிரம்பியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதியான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம், கொடிவேரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று பெய்த பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13 அடி உயர்ந்து நிரம்பியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரும்பள்ளம் அணை பகுதியில் 65 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போன்று சத்தியமங்கலம், தாளவாடி, கொடிவேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
ஆனால் இதே நேரத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெப்பத்தாலும் புழுக்கத்தாலும் மக்கள் அவதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X