search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி
    X
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி

    குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு

    குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நீர் ஆதாரங்களை சீரமைத்து அதன் மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் விவசாய பாசனதாரர்களின் பங்களிப்புடன் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் இன்றையதினம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம், கோவில் வீரக்குடி கிராமத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குமரமுத்தான்குளம் கண்மாய் பாசன வாய்க்கால் கட்டுமானப் பணியையும் மற்றும் தூர்வாரும் பணியையும், வத்தனாக்குறிச்சி கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வத்தனாக் குறிச்சி பெரியகுளம் பாசன வாய்க்கால் கட்டுமானப் பணியையும் மற்றும் தூர்வாரும் பணியையும் என மொத்தம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின் போது பாசன வாய்க்கால் கட்டுமான பணிகளை தரமாக மேற் கொண்டு விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தர விடப்பட்டுள் ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

    Next Story
    ×