search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

    குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

    புதுக்கோட்டையில் குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தெகுநாதபுரம் ஆதி திராவிடர் காலணியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உடனடியாக குடிநீர் வழங்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தித்தரவும் வலியுறுத்தி தெகுநாதபுரம், புதுவிடுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, உதவி மின் பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் பேச்சுவர்த்தை நடத்தினர். உடனடியாக மின்மாற்றியை சரி செய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வது என்றும், வாய்க்கால் தூர்வாரப்பட்டு கழிவுநீரை வெளியேற்றுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
    Next Story
    ×