என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் அக்காள் வீட்டுக்கு வந்த தம்பி குத்திக்கொலை - தொழிலாளி கைது
Byமாலை மலர்1 Oct 2019 11:24 AM GMT (Updated: 1 Oct 2019 11:24 AM GMT)
கோத்தகிரியில் அக்காள் வீட்டுக்கு வந்த தம்பியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மநாரையை சேர்ந்தவர் ரங்கன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலி (19). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நீலியின் தம்பி பிரகாஷ் (18) உறவினராக வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ரங்கனுக்கும், பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கன் மனைவியின் தம்பியை கத்தியால் குத்தினார். கழுத்தில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரங்கனை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மநாரையை சேர்ந்தவர் ரங்கன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலி (19). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நீலியின் தம்பி பிரகாஷ் (18) உறவினராக வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ரங்கனுக்கும், பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கன் மனைவியின் தம்பியை கத்தியால் குத்தினார். கழுத்தில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரங்கனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X