search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

    ஆலங்குடியில் முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி கீழசுண்ணாம் புகாரதெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). கூலி தொழிலாளி. இவருக்கும் அதேபகுதி அம்பேத்கர்நகரை சேர்ந்த செல்வம் (28), பள்ளத்திவிடுதியை சேர்ந்த ராஜப்பன் (57) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவதன்று செல்வம் அவரது மனைவி பாலதர் ஷனி, ராஜப்பன் அவரது மகள் பிரதீபா ஆகிய 4 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்ததார். உடனே அக்கம் பக்கத்தினர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து முருகேசன் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்வம், ராஜப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலதர்ஷினி, பிரதீபா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×