என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் தி.மு.க. நிர்வாகி- மூதாட்டி கொடூர கொலை
Byமாலை மலர்24 Sep 2019 1:57 PM GMT (Updated: 24 Sep 2019 1:57 PM GMT)
கோத்தகிரியில் ஒரே நாளில் தி.மு.க. நிர்வாகி மற்றும் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கீழ்கோத்தகிரி. இந்த பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 70). திருமணம் ஆகாதவர். தேனாடு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்தார். இவரது அண்ணன் மகன் மூர்த்தி (45). இவருக்கு அடைக்கலம் கொடுத்து மகனை போல் பராமரித்து வந்தார். மூர்த்திக்கு குடி பழக்கும் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு மூர்த்தி வீட்டுக்கு சென்றார். அப்போது விசாலாட்சுக்கும், மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி மூதாட்டியை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் கிடந்த விசாலாட்சி மண்எண்ணை ஊற்றி தீ வைத்து எரிக்க வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த விசாலாட்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே விசாலாட்சி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சோலூர் மட்டம் போலீசார் வழக்குபதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கோத்தகிரி அருகேயுள்ள சோலூர்மட்டம் நீர்கண்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க.., நிர்வாகி பாண்டியன் (80). இவர் அதே பகுதியில் கோழிகடை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சின்னபாண்டி (40). மனைவி பிரிந்து சென்ற நிலையில், சின்னபாண்டி தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று குடிபோதையில் சென்ற சின்னபாண்டி, தனது தந்தை பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னபாண்டி தந்தையை தள்ளிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குபதிவு செய்து சின்னபாண்டியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X