search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    டி.என்.பாளையம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

    சாலை விபத்தில் நண்பர்கள் இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம், சின்னகாளியூர் சேர்ந்தவர் ரஞ்சித் (எ)தங்கராஜ் (வயது30). மெக்கானிக் கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). தங்கராஜ், ரமேஷ் இருவரும் நண்பர்கள்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் தங்கராஜிம், ராமேசும் மோட்டார் சைக்கிளில் கணக்கம் பாளையத்திலிருந்து கள்ளிப்பட்டி செல்வதற்காக பவானி-சக்தி ரோட்டில் வந்துகொண்டிருந்தனர்.

    கணக்கம்பட்டி அருகே பழைய பிரபு குமார் தியேட்டர் அருகே வந்தபோது மோட்டர் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் தங்கராஜிக்கும், ரமேசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டார். தங்கராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×