என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ஈரோட்டில் டைமிங் தகராறில் டிரைவர்கள் வாக்குவாதம் - பஸ்களை ரோட்டில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோட்டில் டைமிங் தகராறில் தனியார் மற்றும் அரசு டிரைவர்கள் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாததில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நாமக்கல் மாவட்டம் எஸ். பி.பி. காலனி வரை சென்று வரும் அரசு பஸ், தனியார் பஸ் டிரைவர்கள் இடையே டைமிங் தகராறு ஏற்பட்டது.
காளைமாடு சிலை அருகே அரசு பஸ் முன்பாக சாலையை மறித்து தனியார் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதன்பின் இறங்கிவந்து அரசு பஸ் டிரைவருடன் வாக்குவாதம் செய்தார் .
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். சாலையில் இரண்டு பஸ்களும் அடுத்தடுத்து சாலையை மறித்து நின்றதால் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனால் காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ரெயில்வே நுழைவு பாலம் பகுதிகளிலிருந்து வந்த வாகனங்கள் காந்திஜி சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு வந்து இரண்டு பஸ் ஓட்டுனர்களையும் எச்சரித்து அனுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நாமக்கல் மாவட்டம் எஸ். பி.பி. காலனி வரை சென்று வரும் அரசு பஸ், தனியார் பஸ் டிரைவர்கள் இடையே டைமிங் தகராறு ஏற்பட்டது.
காளைமாடு சிலை அருகே அரசு பஸ் முன்பாக சாலையை மறித்து தனியார் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதன்பின் இறங்கிவந்து அரசு பஸ் டிரைவருடன் வாக்குவாதம் செய்தார் .
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். சாலையில் இரண்டு பஸ்களும் அடுத்தடுத்து சாலையை மறித்து நின்றதால் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனால் காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ரெயில்வே நுழைவு பாலம் பகுதிகளிலிருந்து வந்த வாகனங்கள் காந்திஜி சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு வந்து இரண்டு பஸ் ஓட்டுனர்களையும் எச்சரித்து அனுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story






