என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
5, 8-ம் வகுப்புக்கு பொது தேர்வை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
5, 8-ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “வைக்காதே வைக்காதே தன்மானத்தை அடகு வைக்காதே... வைக்காதே வைக்காதே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வைக்காதே...” என்று கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி “இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி ஈரோடு காளைமாடு சிலை அருகே வரும் 20ஆம் தேதி ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்