என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவிக்கு காதல் தொந்தரவு - வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள் 3 பேர் கைது
Byமாலை மலர்7 Sep 2019 2:37 PM GMT (Updated: 7 Sep 2019 2:37 PM GMT)
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் பாசனா பள்ளியை சேர்ந்தவர் 16 வயது பள்ளிமாணவி. இவர் ஆம்பூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவரை மோதகபள்ளியை சேர்ந்த பாரத்வர்மா (19) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பள்ளி மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.
ஆனாலும் பாரத்வர்மா மாணவி பள்ளிக்கு வந்து செல்லும் போது தனது நண்பர்களுடன் வந்து கிண்டல் செய்து காதல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது பாரத்வர்மா மாணவியை மறித்து காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் மாணவி செய்வதறியாமல் அழுதார். இதனை கண்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத்வர்மாவை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பாரத்வர்மா மாணவிக்கு காதல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் பாசனா பள்ளியை சேர்ந்தவர் 16 வயது பள்ளிமாணவி. இவர் ஆம்பூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவரை மோதகபள்ளியை சேர்ந்த பாரத்வர்மா (19) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பள்ளி மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.
ஆனாலும் பாரத்வர்மா மாணவி பள்ளிக்கு வந்து செல்லும் போது தனது நண்பர்களுடன் வந்து கிண்டல் செய்து காதல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது பாரத்வர்மா மாணவியை மறித்து காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் மாணவி செய்வதறியாமல் அழுதார். இதனை கண்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத்வர்மாவை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பாரத்வர்மா மாணவிக்கு காதல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X