என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்தி வரதர் விழா - காஞ்சிபுரம் பகுதிகளில் 9 நாட்கள் விடுமுறை
Byமாலை மலர்8 Aug 2019 7:43 AM GMT (Updated: 8 Aug 2019 7:43 AM GMT)
உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம்:
அத்திவரதர் விழா நிறைவு பெற இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே வரும் நாட்களில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. வருகிற சனிக்கிழமை (10-ந் தேதி) முதல் திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை 12-ந் தேதி) வரை பொது விடுமுறையாகும். இந்த 3 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சுதந்திர தின விடுமுறை. பின்னர் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை ஆகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் காஞ்சிபுர நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதர் விழாவில், வரும் நாட்களில் இதுவரை தரிசித்த பக்தர்களைவிட கூடுதலான பக்தர்கள் வருவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அத்திவரதர் விழா நிறைவு பெற இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே வரும் நாட்களில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. வருகிற சனிக்கிழமை (10-ந் தேதி) முதல் திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை 12-ந் தேதி) வரை பொது விடுமுறையாகும். இந்த 3 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சுதந்திர தின விடுமுறை. பின்னர் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை ஆகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் காஞ்சிபுர நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதர் விழாவில், வரும் நாட்களில் இதுவரை தரிசித்த பக்தர்களைவிட கூடுதலான பக்தர்கள் வருவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X