search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திவரதர்
    X
    அத்திவரதர்

    அத்தி வரதர் விழா - காஞ்சிபுரம் பகுதிகளில் 9 நாட்கள் விடுமுறை

    உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதர் விழா நிறைவு பெற இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே வரும் நாட்களில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. வருகிற சனிக்கிழமை (10-ந் தேதி) முதல் திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை 12-ந் தேதி) வரை பொது விடுமுறையாகும். இந்த 3 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து சுதந்திர தின விடுமுறை. பின்னர் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை ஆகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் காஞ்சிபுர நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதர் விழாவில், வரும் நாட்களில் இதுவரை தரிசித்த பக்தர்களைவிட கூடுதலான பக்தர்கள் வருவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×