search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஆலங்குடி அருகே விபத்தில் பெயிண்டர் பலி

    ஆலங்குடி அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள புத்தாம்பூர் பூசாரித்தெருவை சேர்ந்தவர் வீரையா(வயது45).இவர் பெயிண்டர்.

    தொழில் காரணமாக மாந்தங்குடி வந்துள்ளார்.அங்குள்ள கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புத்தாம்பூர் திரும்பும்போது தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் செல்லும் போது சாலையில் வேகமாக வந்தகார் வீரையா மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வீரையாவுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அக்கம் பக்கத்தினர் வீரையாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால்அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து சம்பட்டிவீடுதி போலீசார் வழக்குப்பதி செய்து விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுந்தர் மகன் சுந்தர்ராம் என்பவர் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×