search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாலாற்றில் உள்ள பம்ப் ஹவுஸ்சில் இருந்து உயர் மின் அழுத்த மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சபட்டு குடிநீர் வழங்கபட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). மரம் வெட்டும் தொழிலாளி.

    இவர் ஆற்காடு அருகே உள்ள முப்பதுவெட்டி பகுதியில் தங்கி மரம் வெட்டும் தொழிலை செய்து வந்தார்.குமார் நேற்று இரவு பம்ப் ஹவுஸ்சில் உள்ள மின் ஒயர்களை திருட முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து ஆற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×