என் மலர்
செய்திகள்

பிளாஸ்டிக் தடை
சீர்காழியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடைக்காரர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்
சீர்காழியில் பல கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு ரூ.4ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் உத்தரவின்படி சீர்காழி பழைய பஸ்நிலையம், தேர்வடக்குவீதி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிமேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதாரஆய்வாளர் மோகன், வருவாய்ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல கடைகளிலிருந்து 300 கிலோ வரை பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்ததாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.4ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பின்னர் அழித்தனர். வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்தால் கடும் நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் தெரிவித்தார்.
சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் உத்தரவின்படி சீர்காழி பழைய பஸ்நிலையம், தேர்வடக்குவீதி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிமேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதாரஆய்வாளர் மோகன், வருவாய்ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல கடைகளிலிருந்து 300 கிலோ வரை பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்ததாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.4ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பின்னர் அழித்தனர். வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்தால் கடும் நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் தெரிவித்தார்.
Next Story






