என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்24 July 2019 9:57 AM GMT (Updated: 24 July 2019 9:57 AM GMT)
வேதாரண்யம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளியில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் 10 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் கம்யூட்டர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 2 லேப்டாப் திருடு போனது.
இது குறித்து தலைமை ஆசிரியர் பழனிவேலன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா விசாரணை நடத்தினார். அதில் பள்ளி சீரமைப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் சிம்மராஜசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 22), வேலூரை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய 2 பேர் லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சிவக்குமார் மற்றும் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளியில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் 10 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் கம்யூட்டர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 2 லேப்டாப் திருடு போனது.
இது குறித்து தலைமை ஆசிரியர் பழனிவேலன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா விசாரணை நடத்தினார். அதில் பள்ளி சீரமைப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் சிம்மராஜசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 22), வேலூரை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய 2 பேர் லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சிவக்குமார் மற்றும் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X