என் மலர்
செய்திகள்

தற்கொலை
பெருந்துறை அருகே மாட்டு தொழுவத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவன்
பெருந்துறை அருகே வயிற்று வலி காரணமாக மாட்டு தொழுவத்தில் பள்ளி மாணவன் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த ரைஸ்மில் புதூரை சேர்ந்தவர் சோலையரசன்(வயது 38). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தான லட்சுமி(வயது 35). இவர்களுக்கு கவுதம்(வயது 17), நிருபன்(வயது 13) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் கவுதம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதேபள்ளியில் நிருபன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கவுதம் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோலையரசன் உட்பட அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். மறுநாள் காலை(நேற்று) சந்தானலட்சுமி எழுந்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, கவுதம் மாட்டு தொழுவத்தில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கவுதமை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால், டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கவுதமின் உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கவுதம் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த ரைஸ்மில் புதூரை சேர்ந்தவர் சோலையரசன்(வயது 38). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தான லட்சுமி(வயது 35). இவர்களுக்கு கவுதம்(வயது 17), நிருபன்(வயது 13) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் கவுதம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதேபள்ளியில் நிருபன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கவுதம் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோலையரசன் உட்பட அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். மறுநாள் காலை(நேற்று) சந்தானலட்சுமி எழுந்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, கவுதம் மாட்டு தொழுவத்தில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கவுதமை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால், டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கவுதமின் உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கவுதம் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story